Wednesday 23 March 2016

pon radhakrishnan says congratulation to dmdk

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தி.மு.க., அ.தி.முக. என்கிற திராவிட கட்சிகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
அதற்காகத்தான் பா.ஜனதா மாற்றாக, வலுவான கூட்டணி அமைய முயற்சி செய்து இருக்கிறோம். அண்ணன் வைகோ தலைமையில் இருக்கும் மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்து இருக்கிறார்.
இந்த கூட்டணி அமைந்ததின் நோக்கம் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே அந்த கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழக மக்களின் நலனுக்கு, எதிர்பார்ப்புக்கு விரோதமாகதான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடையாது.

இன்று பவுர்ணமி நாள். முழுமையான நாள். தேய்பிறை காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. பா.ஜனதாவில் தே.மு.தி.க. வரவில்லை என்பதால் நாங்கள் தனித்து விடப்படவில்லை.
பா.ஜனதா வலுவாகத்தான் இருக்கிறது. நேற்று முன்தினம் கூட எங்கள் மாநில தலைவர் 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணி அமையும். எங்கள் கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
மக்கள் நலக் கூட்டணி – தே.மு.தி.க. கூட்டணியால் எந்த பயனும் இல்லை. அண்ணன் வைகோ தலைமையில் கூட்டணி இருப்பதால் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை.
விஜயகாந்தை முதல்– அமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறார்கள். இந்த கூட்டணி வெற்றி பெறாது என்றாலும் கூட முதல்–அமைச்சராக விஜயகாந்த் வர வாய்ப்பே இல்லை என்றாலும் கூட என்னுடைய அருமை சகோதரர் என்பதால் முதல்– அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்துக்கு எனது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment